உள்நாட்டு செய்திகள்

அமைச்சரவை அறிக்கைகளை ஆராய சிறப்பு குழு..



அமைச்சரவை அறிக்கைகளை, அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு முன்னர், அது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றினை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணி அரசு தீர்மானித்துள்ளது.

குறித்த குழுவானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றலுடன் இடம்பெற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாரத்திற்கு ஒரு முறை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களால் அமைச்சரவைப் பத்திரங்கள் முன்வைக்கப்படுவதோடு, அதன்போது இடம்பெறும் அசௌகரியங்களை குறைக்கவே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி குறித்த அமைச்சரவைக் குழுவானது இன்று(01) மாலை 03.00 மணிக்கு முதல் தடவையாக கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு 20-க்கும் மேற்பட்ட மான்கள் திருகோணமலையில் உயிரிழப்பு..!

wpengine

அனுமதிப் பத்திரம் இன்றி பயணிக்கும் தனியார் பேரூந்துகளுக்கான தண்டப் பணத் அதிகரிப்பு…

wpengine

கடுவலை – பியகம வரையிலான வீதிக்கு பூட்டு…

wpengine