உள்நாட்டு செய்திகள்

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக GMOA கடும் எதிர்ப்பு…



பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை மீண்டும் சுகாதார அமைச்சராக நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இதற்கெதிராக எடுக்க வேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய, நிறைவேற்று சபையை கூட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறைவேற்று சபை கூட்டத்தையடுத்து, செயற்குழு கூட்டத்தையும் கூட்டவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.

ராஜித சேனாரத்ன அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக அவருக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்க வேண்டாம் எனக் கோரி, 14,000 க்கும் அதிகமான வைத்தியர்கள் கையொப்பமிட்ட மனுவொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்க எதிர்பார்த்திருந்ததாகவும், இவ்வாறான நிலையில் அவருக்கு மீண்டும் சுகாதார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – அரசு அறிவிப்பு..!

wpengine

உச்ச பட்ச இழப்பீடுகளுக்காக போலி நாடகம் போடும் அரசியல்வாதிகள் !

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 1824 பேர் கைது

wpengine