உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனையில் வாகனப் போக்குவரத்து மட்டு…


குடிநீர் குழாய் பொருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளமை காரணமாக கொட்டாஞ்சேனையில் பல பகுதிகளில் நாளை(14) வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

கொட்டாஞ்சேனை கே. சிறில் பெரேரா மாவத்தை, வாசல சந்தியில் இருந்து வோல்ஸ் லேன் வீதி சந்தி வரையான வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

நாளை(14) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை வரை வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த வீதியை பயன்படுத்துவோர் குறித்த நாட்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதன்படி, ஜோன் ஆர் த சில்வா மாவத்தையூடாக உள்நுழைபவர்கள் பீல்ட் வீதியூடாக அளுத்மாவத்தைக்கு சென்று மோதர மற்றும் மட்டக்குளிக்கு செல்ல முடியும் எனவும், மோதர மற்றும் மட்டக்குளி ஊடாக உள்நுழைபவர்கள் வேல்ஸ் வீதியூடாக அளுத் மாவத்தைக்கு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

ஐக்கிய நாடுகளது ஜெப்ரி பெல்ட்மேன் இன்று இலங்கைக்கு….

wpengine

நான்காவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine