உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-45 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

காஜா என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 900 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.5N, கிழக்கு நெடுங்கோடு 87.4E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் இருக்கும் மீனவர்களுக்கும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Related posts

ஈ.டி.ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் அமைப்பு இன்று(08) மத்திய வங்கியில் மனு கையளிக்கவுள்ளது..

wpengine

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று ஆரம்பம்…

wpengine

தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம் மீண்டும் தாயகம் திரும்புகின்றது !

wpengine