உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019 ஆம் ஆண்டு சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்..


நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தும் வகையில் 2019 ஆம் ஆண்டை சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று(02)  இடம்பெற்ற பொலன்னறுவை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் கீழ் நாடளாவிய ரீதியில் மரக்கன்றுகளை நடும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி சூழல் பாதுகாப்பிற்காக விரிவானதோர் பணியை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கு மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், பாடசாலை பிள்ளைகள் மற்றும் அனைத்து பிரஜைகளினதும் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கை அணியுடனான போட்டிக்கு இங்கிலாந்து அணி தாயகம் வருகை…

wpengine

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கொழும்பு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்…

wpengine