உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு பாதுகாப்பு…


வெலிக்கட, கொழும்பு விளக்கமறியல் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக இன்று(25) முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளை சுற்றி பாதுகாப்பு மற்றும் வௌியில் இருந்து வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட உள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது.

சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் பாகதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ள நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்தது.

Related posts

மேல் மாகாணத்தில் 1,113 பேர் கைது

wpengine

14 இலட்சம் கொள்ளை – சந்தேகநபர் கைது

wpengine

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைக் கடத்திச் செல்லமுற்பட்ட மூவர் புத்தளத்தில் கைது..!

wpengine