உள்நாட்டு செய்திகள்

லிந்துலை மண்சரிவு எச்சரிக்கை – 94 பேர் வௌியேற்றம்…


லிந்துலை – எல்ஜீன் பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 26 குடும்பங்களைச் சேர்ந்த 94 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக 26 வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஹற்றன் – செனன் செம்புவத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியுடனான போக்குவரத்து இதுவரையில் முழுமையாக வழமைக்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் ஒரு வழி போக்குவரத்து மட்டுமே மேற்கொள்ப்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தமது போக்குவரத்து செயற்பாடுகளை மேலும் இலகுபடுத்திக் கொள்வதற்கு மாற்றுவழிகளை பயன்படுத்துமாறும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

கபீர் ஹஷீம் உள்ளிட்ட எழுவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

wpengine

கடத்தப்பட்ட கார் மீட்கப்பட்டது

wpengine

மகிந்தவை இந்தியாவிற்கு அழைக்கப்போகும் இந்தியாவின் அரசியல் முக்கியஸ்தர்!

wpengine