உள்நாட்டு செய்திகள்

தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு இன்று(10) முதல்…


2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் இருந்தால் இன்று(10) முதல் செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை தெரிவிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அவற்றில் பெயர் அல்லது முகவரி போன்ற விடய்ஙகள் உள்ளடக்கப்படவில்லை என்றாலோ அல்லது சரியான தகவல் இல்லை என்றாலோ அது சம்பந்தமாக மேன்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்ட 2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு ஒக்டோபர் மாதம் 05ம் திகதி உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

வஸீம் தாஜுதீன் கொலைக்கும் நமது குடும்பத்திற்கும் தொடர்பில்லை – நாமல்

wpengine

ஊரடங்கு சட்டத்தை மீறிய 91 பேர் கைது

wpengine

இலங்கை அணி 8 விக்கட் இழப்பிற்கு 91 ஓட்டங்களை பெற்ற நிலையில் 3ம் நாள் ஆடம் இன்று

wpengine