உள்நாட்டு செய்திகள்

பொல்கஹவெல, பனலிய ரயில் விபத்து குறித்து ஆராய குழு…


பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் நேற்று(06) மாலை இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்துக்கான காரணம் தொடர்பில் அடிப்படை விசாரணைகளை மேற்கொள்ள குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கொழும்பு இலிருந்து கண்டி நோக்கி சென்ற ரயிலானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பொல்கஹவெல, ரயில் நிலையத்தின் அருகே நிறுத்தி வைக்கையில் கொழும்பில் இருந்து ரம்புக்கன நோக்கிப் பயணித்த மற்றுமொரு ரயில் பின்னால் வந்து நிறுத்தியிருந்த ரயிலில் மோதியதில் 32 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

R.Rishma

Related posts

ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது…

wpengine

மேல் மாகாண புகையிரத சேவைகள் அதிகரிப்பு

wpengine

சப்ரசமுக பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம். – சவுதி கடன் உதவி…

wpengine