உள்நாட்டு செய்திகள்

நான்கு பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து…


வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் வன்முறைக் குழுவினரை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன், வன்முறைச் சம்பவங்களை புரிவதற்காக ஒன்று கூடும் இடங்களையும், அநாவசியமாக வீதிகளில் நடமாடும் இளைஞர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணித்து, நான்கு பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுமுறைகளை காலவரையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் இன்று சமர்ப்பிக்கப்படாது – அமைச்சர் கயந்த

wpengine

122.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

wpengine

அநுர – ஷானிக்கு ஆணைக்குழு அறிவிப்பு 

wpengine