உலக செய்திகள்

படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…



அமெரிக்காவில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன், இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது.

இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு மீதமுள்ள 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டதுடன், படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related posts

சர்வதேச நாடுகளுக்கான தனது எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அவுஸ்ரேலியா

wpengine

பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine

வரலாற்றில் முதல்முறையாய் ஈரானில் வெளிநாட்டுப் பெண் தூதுவர் நியமிப்பு

wpengine