விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அபார வெற்றி…


இங்கிலாந்து – இந்தியா இடையிலான 03 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதில், நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர்.

இதன்படி, இந்தியா அணியானது 50 ஓவரில் 08 விக்கெட்டு இழப்பிற்கு 256 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma

Related posts

விதிமுறைகளை மீறிய திஸர மற்றும் வோர்னருக்கு எதிராக தண்டப்பணம்..

wpengine

சகல விளையாட்டுப் போட்டிகளும் இடைநிறுத்தம்

wpengine

பிரபல கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு தடை

wpengine