உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதலமைச்சருக்கு மீளவும் கல்வி அமைச்சுப் பதவி வழங்கியமைக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு..



ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு மாகாண கல்வி அமைச்சுப் பதவி மீண்டும் வழங்கப்பட்டமைக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

பதுளை தமிழ் மகளிர் கல்லூரியின் அதிபருக்கு 2018.01.03 அவமரியாதை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஊவா மாகாண முதலமைச்சரிடம் இருந்து, மாகாண கல்வி அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் பல மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவின் விசாரணைகள் தற்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கன.

இந்நிலையில் மாகாண கல்வி அமைச்சுப் பதவியை மீண்டும் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு வழங்கியமையானது மிகவும் பிரச்சினைக்குறிய விடயம் என்றும், விசாரணைகள் நிலுவையில் இருக்கும் போது பதவியில் அமர்த்தியமை குறித்தும் குறித்த சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

 

Rishma

Related posts

G7 மாநாட்டில் அரச அதிபர்களுடன் ஜனாதிபதி (Photos)

wpengine

இலங்கையின் புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை குறித்து TNA அதிருப்தி.

wpengine

அமைச்சர் சஜித் மற்றும் ஐ.தே.கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று

wpengine