உள்நாட்டு செய்திகள்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை…



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று(12) ஆஜர் படுத்தப்பட்ட போதே நீதவான் அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது மன்னிப்பு காலப்பகுதியில் இதுவரை 5900 இராணுவ வீரர்கள் மீண்டும் சேவைக்கு…

wpengine

உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன…

wpengine

மேர்வின் சில்வா கைது

Azeem Kilabdeen