உள்நாட்டு செய்திகள்

கண்டி தெல்தெனிய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு…



கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் திகன தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

குறித்த சம்பவத்தின் காரணமாக உயிரிழந்த மூவருக்காக நபர் ஒருவருக்கு 5 இலட்சம் வீதம் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவருக்காக அரச வைத்திய அறிக்கையின் அடிப்படையில் ஆகக்கூடியது 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவிற்கு உட்பட்டதாக இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம்.சுவாமிநாதன் வழங்கிய ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்திய பிரதமர் இன்று அநுராதபுரத்திற்கு விஜயம்

Azeem Kilabdeen

தபால் மூல வாக்களிப்பு – ஐந்தாம் நாள் இன்று

wpengine

கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine