உள்நாட்டு செய்திகள்

கைதாகிய இந்திய பிர​ஜைகள் 23 பேரும் நாடு கடத்தல்…



நேற்றைய தினம்(14) கொழும்பில் கைது செய்யப்பட்ட 23 இந்திய பிரஜைகளும் நாடுகடத்தப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் இன்று(15) நாடுகடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கொழும்பின் பல பகுதிகளிலிருந்து இந்திய பிரஜைகள் 23 பேரும் நேற்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்

சுற்றுலா வீசாவில் நாட்டிற்கு வருகை தந்து சட்டவிரோதமாக தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் திடீர் சோதனை – கரையோர ரயில் சேவை தாமதம்…

wpengine

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை நீடிப்பு..

wpengine

ரவி கருணாநாயக்கவின் அமைச்சுப்பதவி மங்கள சமரவீரவுக்கு…

wpengine