உள்நாட்டு செய்திகள்

தென்பகுதியில் தாழமுக்கம் – நாட்டின் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை….



இலங்கையின் வளிமண்டலத்தில் உருவான தாழமுக்கம் நாட்டின் தென்பகுதியில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மென்மேலும் வலுவடைந்து மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையிலான திசையில் அரேபிய கடலை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தீவின் பல பாகங்களிலும், சூழவுள்ள கடல்பரப்பிலும் மேக மூட்டத்துடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடும் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தெற்கு, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையிலான மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையிலும் விமானப் பாகங்கள் பொருத்தும் பாரிய தொழிற்சாலை

wpengine

இலஞ்சம் வழங்க முயன்ற இருவர் கைது

wpengine

இறுதி நேரத்தில் தோற்றுப்போன கோட்டாபயவின் திட்டங்கள்!

wpengine