உள்நாட்டு செய்திகள்

மேல்மாகாண முதலமைச்சரிடமிருந்து மனுத்தாக்கல்



தன்னை கைதுசெய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கைது செய்யாமல் இருப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறும் வேண்டி, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அவர் அவரது அடிப்படி உரிமை மனுவில் தனக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கை நிறுத்துமாறும் குறிப்பிட்டுள்ளார்.

கொலன்னாவையிலுள்ள மாகாண சபைக்குரிய காணியை விற்பனை செய்வதற்காக மொரட்டுவையில் உள்ள வர்த்தகரிடம் 65 மில்லியன் ரூபாய் கேட்டதாகவும் அதில் 8 மில்லியன் ரூபாவை பெற்றுகொண்டதாகவும் கூறி தனது மனைவியிடம் கொள்ளுப்பிட்டியிலுள்ள நிதி மோசடி பிரிவினர் விசாரணை நடத்திவருவதாகவும் அவர், தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

(riz)

 

 

Related posts

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ள காசல் வைத்தியசாலை சேவைகள்…

wpengine

சீரற்ற காலநிலை – மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட விமானம்…

wpengine

இன்று 15 மணித்தியால நீர் விநியோக தடை…

wpengine