உலக செய்திகள்

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து 11 பேர் உயிரிழப்பு…



ஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று தளங்கள் கொண்ட இந்த கட்டிடத்தில் 16 முதியோர்கள் தங்கியிருந்தனர். இந்த இல்லத்தில் நேற்று(31) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனே அங்கிருந்த முதியோர் அனைவரும் வெளியேறினர். இருப்பினும் தீ மளமளவெனப் பரவியதால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்தில் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானதுடன் 8 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். 5 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். தீ விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

எய்ட்ஸ் நோய் – ஒரு வருடத்தில் 140 பேர் பாதிப்பு

wpengine

கடும் பனிமூட்டம் காரணமாக இன்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

கொவிட் – 19 தொற்றுடைய மூன்றாவது நபர் கண்டுபிடிப்பு

wpengine