உலக செய்திகள்

வைத்தியசாலையில் பரவிய தீயினால் இதுவரை 33 பேர் பலி..



தென்கொரியாவின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மிர்யங் என்ற இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் வயோதிபர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேஜாங் என்ற மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் தீப்பற்ற தொடங்கி மற்ற இடங்களுக்கும் பரவ தொடங்கியதாக நம்பப்படுகிறது.

குறித்த இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை எனவும் ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

 

#rishma

Related posts

பைசர் தடுப்பு மருந்து அவசரகால பயன்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி

wpengine

கடும் மழை – வெள்ளத்தில் சிக்கி இதுவரை 110 பேர் உயிரிழப்பு

wpengine

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும் மழை காரணமாக மண்சரிவு

wpengine