உள்நாட்டு செய்திகள்

மழையுடன் கூடிய காலநிலை குறைவடையக்கூடும்…



நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்றிலிருந்து குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்திலும் அதிகமாக காற்று வீசக்கூடும் எனவும் மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலைவேளைகளில் பனிகூட்டம் காணப்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஆசியாவின் ராணி டுபாய்க்கு

wpengine

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

wpengine

அரச, தனியார் துறைகளின் செயற்பாடுகள் மந்தகதியில்

wpengine