உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது…



இன்று(13) காலை அமைச்சரவை உபகுழுவுடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த பேச்சுவார்தையை தொடர்ந்து ரயில் ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்ட ரயில்வே தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக அமைச்சரவை குழுவொன்று, அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவுடன், இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, தமது வேலைநிறுத்தத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாக, தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு…

wpengine

மஹிந்தவை அவசரமாக சந்தித்தார் கோபால்

wpengine

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

wpengine