உலக செய்திகள்

கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் மரணம்…



இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நகரெங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மீது மண் சரிந்து விபத்து ஏற்பட்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை காரணமாக ஜாவா தீவில் உள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் விவகாரத்தில் உக்கிரமடையும் மோதல்

wpengine

கரப்பான் பூச்சிற்கு பயந்த துருக்கி அதிபர்

wpengine

ஜனாதிபதி தேர்தல் மோசடி – ரஷ்யா மீது விசாரணை செய்ய ஒபாமா உத்தரவு..

wpengine