உள்நாட்டு செய்திகள்

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிப்பு…



நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதன் நீர்மட்டம் நான்கு மீற்றர்கள் உயருமானால் மின் உற்பத்தி கருவிகள் தானாக இயங்கத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய மலை நாட்டின் ரிவர்ஸ்டன், நக்கிள்ஸ் மலைத்தொடர்களில் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நிரம்பியுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு 187 மீற்றர் உயரமானது. இதில் நீர்மட்டம் 174 மீற்றர் வரை உயர்ந்தால் மின் உற்பத்திக் கருவிகள் தானாக இயங்கும். தற்போது நீர்மட்டம் 170 மீற்றராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை…

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு

wpengine

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

wpengine