உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்தது உயர் நீதிமன்றம்..



இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க கீதா குமாரசிங்க தகுதியுடையவர் அல்ல என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, உயர்நீதிமன்றம் இன்று(02) உறுதி செய்துள்ளது.

குறித்த மனு இன்று(02) பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இரட்டைக் குடியுரிமை இருப்பதால், கீதா குமாரசிங்கவுக்கு, இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருக்க முடியாது என, கடந்த மே மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, குறித்த இந்த தீர்ப்பை எதிர்த்து கீதா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

wpengine

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீன் அனுதாபம்

wpengine