உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..



சதொச ஊழியர்கள் சிலரை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு சுமார் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று(27) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்குறித்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2010, 2014ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் சதொச கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் 150 ஊழியர்களின் உத்தியோகபூர்வ வேலைக்கு பதிலாக அவர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமைக்காவே குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

தாஜுதீன் கொலை விவகாரத்தில் சுமார் 180 பொலிசாரிடம் வாக்குமூலம், நீதிபதி உத்தரவு

wpengine

சட்டவிரோத மதுபானத்திற்கு பதிலாக புதிய வகை மதுபானம்!

Azeem Kilabdeen

சலாவ இராணுவ முகாம் வெடிப்புக்கு கோத்தவும் மஹிந்தவுமே பொறுப்பு – அகில

wpengine