உள்நாட்டு செய்திகள்

அரசியல் கைதிகளின் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை…



அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற 3 அரசியல் கைதிகள் தொடர்பான மீளாய்வு மேன்முறையீட்டு மனு நாளை(26) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர்களது வழக்குகள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை மற்றும் போதைவஸ்த்துக் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட கைதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

குறித்த அரசியல் கைதிகள் இன்று 31ம் நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

மேலும் 139 பேருக்கு கொரோனா

wpengine

சீன அரசின் அழைப்பின் பேரில் மஹிந்த ராஜபக்ஷ சீன விஜயம்.

wpengine

இதுவரை 321 பேர் பூரண குணமடைந்துள்ளனர்

wpengine