உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை வீதியின் ஒரு பகுதி இன்று முதல் பூட்டு…



கொட்டாஞ்சேனை வாசல வீதி சந்தியிலிருந்து பரமானந்த விகாரை வரையிலான பகுதியில் இன்று(13) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலக்கீழ் நீர்குழாய் திருத்த பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக குறித்த பகுதிக்கான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(13) இரவு 9.00 மணி முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மாத்திரம் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்படும் எனவும் ஏனைய வாகனங்கள் சென் பெனடிக் வீதியினூடாக புளுமெண்டல் வீதியினை சென்றடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடுத்த மூன்று மாதங்களுள் தனது அரசியலுக்கு ஓய்வு – மஹிந்த

wpengine

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து பாதிப்பு…

wpengine

சைபர் தாக்குதல்களிலிருந்து இணையத்தளங்களைப் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

wpengine