வாழ்க்கை

முக அழகை பெற திராட்சையை மாத்திரம் பயன்படுத்துவது எப்படி?



சருமத்தின் அழகை கூட்ட பல மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுவது திராட்சை தான். திராட்சையை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்

சரும ஆரோக்கியம்:
திராட்சை முகத்தில் உள்ள பருக்களை போக்கி முகத்திற்கு பளபளப்பை அளிக்கும் திறன் கொண்டது. இதனை சருமத்தில் நேரடியாகவே பயன்படுத்தலாம்.

இரத்த ஓட்டம் அதிகரிக்க:
திராட்சையின் விதைகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடியவை. இவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க கூடியவை.

ஈரப்பதம் பாதுகாக்க:
திராட்சை விதை எண்ணெய்யில் விட்டமின் சி மற்றும் விட்டமின் இ அதிகமாக உள்ளது. இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்திற்கு பொலிவை தருகிறது.

திராட்சை மாஸ்க்:
திராட்சையை நன்றாக அரைத்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். இந்த திராட்சை விதை மாஸ்க் முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் இருக்க வேண்டியது அவசியம். பின்னர் இதனை சுத்தமான நீரினால் கழுவி விட வேண்டும்.

வறண்ட சருமத்திற்கு:
வறண்ட சருமம் கொண்டவர்கள் சிறிதளவு திராட்சையை நன்றாக அரைத்து அதனுடன் அவோகேடா மற்றும் இரண்டு டீஸ்பூன் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவி விட வேண்டும்.

Related posts

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்..

wpengine

பற்சிதைவு ஏற்படுவதற்கான காரணங்கள்…

wpengine

குழந்தைகள் நொறுக்குக்தீனி சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்

wpengine