உள்நாட்டு செய்திகள்

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதி இன்று முதல் பூட்டு…



கொழும்பு, கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதி இன்று(22) முதல் மூன்று நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியின் குடிநீர்க்குழாயில் திருத்தப் பணிகள் மேற்கொள்ள இருப்பதன் காரணமாக அளுத்மாவத்தை வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று 22 ஆம் திகதி இரவு 9 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 5 மணி வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே வாகன சாரதிகள் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

மேலும் 370 பேர் பூரணமாக குணம்

wpengine

தனிமைப்படுத்தல் சட்டம் : பலர் சிக்கினர்

wpengine

பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

wpengine