உள்நாட்டு செய்திகள்

சைட்டம் எதிர்ப்புக்கு முழுமையான பங்களிப்பை செலுத்த தயார்..- அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்..



எதிர்வரும் 21 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சைட்டம் எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு தமது முழுமையான பங்களிப்பை செலுத்துவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

சைட்டம் தரமற்றது என இங்கிலாந்தும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனினும் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல போன்றோர் நெவில் பெர்னான்டோவின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றனர்.

எவ்வாறெனினும் சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது முழுப் பங்களிப்பையும் செலுத்தி போராடும் என லஹிரு வீரசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

போக்குவரத்து திணைக்களத்திலிருந்த குறிப்பிட்ட சில வாகன பதிவு பத்திரங்கள் அழிப்பு…

wpengine

நண்பனின் வீட்டுக்கு சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

News Editor

நுகேகொடை மற்றும் தெஹிவளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து ஒத்திகை..

wpengine