உள்நாட்டு செய்திகள்

வயோதிப மத குருமார்களுக்கு காப்புறுதி திட்டம்..



அனைத்து வயோதிப மத குருமார்களுக்கும் காப்புறுதி திட்டத்தை வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் தேசிய பௌத்த அறிஞர் சபைக் கூட்டம் நேற்று(12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆலோசனை வாங்கியுள்ளார்.

குறித்த இந்த கலந்துரையாடலில் தேசிய பௌத்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் வண. கொட்டபிற்றியே ராகுல தேரர், பேராசிரியர் வண.கல்லேல்லே சுமணசிறி தேரர், கலாநிதி வண. அக்குரற்றியே நந்த தேரர் உள்ளிட்ட தேரர்களும் பௌத்த சாசன அமைச்சின் செயலாளர் சந்ரபிரேம கமகே உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

(rizmira)

Related posts

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனையாளராக சங்கக்கார…

wpengine

பலரை வியப்பில் ஆழ்த்திய ரணிலின் திடீர் முடிவு

wpengine

“ஒரே நாளில் 200 பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :- அமைச்சர் ரிஷாட்!

wpengine