உள்நாட்டு செய்திகள்

எல்பிடிய – உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் தொடர்பில் இடைக்கால அறிக்கை..



எல்பிடிய – குருந்துகஹா ஹெதெக்ம உப அஞ்சல் நிலைய அதிபரின் மரணம் மற்றும் திணைக்களத்திற்கு சொந்தமான ஆவணங்கள் தீயினால் அழிவடைந்தமை தொடர்பாக இடைக்கால அறிக்கை ஒன்றினை அஞ்சல் திணைக்களம் கோரியுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் விசேட அதிகாரிகள் சிலர் குறித்த இடத்திற்கு சென்று இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரோஹன அபேரத்தின தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அஞ்சல் திணைக்களத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக குறித்த உபஅஞ்சல் நிலையத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம்(29) அதிகாலை குறித்த உப அஞ்சல் நிலையத்தின் பொறுப்பதிகாரி(49) தீயில் கருகிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார்.

அவர் அஞ்சல் நிலையத்திற்கு அருகாமையில் இரண்டு அதிஸ்ட இலாப விற்பனை நிலையங்களையும் பத்திரிகை விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்துள்ளார்.

குறித்த பெண் தீக்கிரையாவதற்கு முன்னர் விசம் அருந்தி இருந்திருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பொருட்டு பலியான குறித்த அஞ்சல் நிலைய பொறுப்பதிகாரியின் உடற்பாகங்கள் சில இரசாயன பகுப்பாய்வுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

மட்டக்களப்பில் கரையொதிங்கிய பாம்புகள் தொடர்பில் நாரா நிறுவனம் ஆய்வு…

wpengine

அரகலயவினால் தேவையற்ற பிள்ளைகள் பிறக்கின்றன – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க..!

wpengine

மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

wpengine