உள்நாட்டு செய்திகள்

மைத்திரி சந்திரிக்காவுக்கு வழி விடுவாரா?



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெகு விரைவில் ஜனாதிபதி, கட்சித் தலைவர் பதவியை கைவிட்டு கட்சி சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிக்கா குமாரதுங்கவுக்கே அப்பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தற்போதைய அரசியல் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் ஜனாதிபதி இப்பதவியை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரோனா தடுப்பூசிகள் விரைவில்

wpengine

பசில் ராஜபக்ஷவுடன் கைகோர்க்கிறது ‘ஜனதா சேவக பக்சய’…

wpengine

சேவையினை தொடர வேண்டுமாயின் பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு இ.போ.ச பஸ்கள் கோரிக்கை..

wpengine