உள்நாட்டு செய்திகள்

மாணவி வித்தியாவின் பாலியல் கொலை வழக்கு இன்று முதல் தொடர் விசாரணைக்கு..



புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் மூவரடங்கிய நீதியரசர் குழுவுக்கு மத்தியில் இன்று(18) முதல் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை 18ம், 19ம், 20ம், 24ம், 26ம் ஆகிய தினங்களில் தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை வித்தியா கொலைக்கான வழக்கு எதிர்வரும் மாதம் இரண்டு வாரத்திற்குள் நிறைவடைவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வித்தியா கடத்தி சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் தற்போது வரையில் சந்தேக நபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வெள்ளவத்தையில் பெருகும் விபாச்சார விடுதிகள்

wpengine

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் தீர்மானமில்லை

wpengine

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

wpengine