கேளிக்கை

பாலியல் உறவு இல்லாமல் என்னால் இருக்க முடியாது – சமந்தா அதிரடிப் பேட்டி..



தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சமந்தா. இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் எதிர்வரும் ஒக்டோபரில் ஹைதராபாத்தில் வைத்து திருமணம் நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், எனக்கு சாப்பாட்டை விட பாலியல் உறவு தான் முக்கியம் என்று சமந்தா கூறியது திரையுலகினரை பெரும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், புதியத் திரைப்படங்களுக்கு கோல்ஷீட் கொடுக்காமல், ஏற்கெனவே ஒப்புக் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகும் கூட நடிப்பைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரபல பத்திரிகைக்காக போட்டோஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது உணவு மற்றும் பாலியல் உறவு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா கூறுகையில், என்னால் உணவு இல்லாமல் கூட இருக்க முடியும், ஆனால், பாலியல் உறவு இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று இப்படி வெளிப்படையாக பேசியது பத்திரிகையாளர்களை மட்டுமல்ல திரையுலகினரையே வியக்க வைத்துள்ளது.

மேலும், இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் சமந்தா, பாலியல் உறவு பற்றி வெளிப்படையாக பேசியது கொஞ்சம் வியப்பாகத் தான் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

வானொலி அரச விருது விழா -2019 நாளை(12) நெலும் பொகுன கலையரங்கில்…

wpengine

ரஜினி மகளின் மறுமணம்…

wpengine

பாடகியான ரம்யா நம்பீஸனால் திரைப்பட பாடகிகளின் வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படுகிறதா?

wpengine