உள்நாட்டு செய்திகள்

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில பிரதேசங்களுக்கு கனமழை…



நாட்டின் மேற்கு , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மாவட்டங்களில் இன்று(30) ஓளரவு மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னலினால் ஏற்படும் அனர்த்தத்திலிருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக் கொண்டுள்ளது.

(rizmira)

Related posts

சீரற்ற காலநிலையினால் மட்டக்களப்பு ரயில்வே திருத்தப் பணிகளில் தாமதம்..

wpengine

சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

wpengine

குடும்பத்துடன் நாட்டை விட்டும் வெளியேறிய மனுஷ

Azeem Kilabdeen