உலக செய்திகள்

சர்ச்சைக்குரிய பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை உச்சநீதிமன்றம் அனுமதித்தது..



சர்ச்சைக்குரிய பயணத்தடை உத்தரவின் ஒரு பகுதியை அனுமதிப்பதாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்குக் கிடைத்த வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் 6 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் உத்தரவின் ஒரு பகுதியை அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அந்த உத்தரவின் சில பகுதிகளை உடனடியாக நிறைவேற்றலாமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கர்களுடனோ, அமெரிக்க அமைப்பு அல்லது நிறுவனங்களுடனோ நியாயமான தொடர்பு இல்லாவிட்டால், அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேசமயம், ட்ரம்பின் உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என கூறும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அதனை எதிர்த்து தொடர்ந்தும் போராடப் போவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 
(rizmira)

Related posts

சீனாவை வலம் வரும் அமெரிக்க போர் விமானங்கள்

wpengine

இந்தியாவின் இரட்டை உருமாற்ற கொரோனா 5 நாடுகளில்

wpengine

காசாவில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த தேவாலயத்தின் மீது தாக்குதல் – 18 கிறிஸ்தவ பாலஸ்தீனியர்கள் படுகொலை..!

wpengine