வணிகம்

இந்தியாவுக்கான சேவைகளை அதிகரிக்கிறது ஸ்ரீலங்கன் விமான சேவை…



இலங்கையின் உத்தியோகபூர்வ விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை மேலும் மூன்று நகரங்களுக்கு அதன் சேவையை ஆரம்பித்துள்ளது.

ஹைதரபாத், விசாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு இடையில் அடுத்த மாதமளவில் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மாதத்தில் இருந்து இவ்வாறு ஸ்ரீலங்கா விமான சேவை அதன் சேவை முன்னெடுக்கவுள்ளது.

இந்த மூன்று நகரங்களுக்கு சேவையை ஆரம்பிப்பதன் ஊடாக இந்தியாவுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவை தனது சேவையை முன்னெடுக்கும் நகரங்கள் 14ஆக அதிகரிக்கின்றது.

ஜுலை 8ம் 12ம் மற்றும் 16ம் திகதிகளில் புதிய சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இலங்கை தொடர்பில் ஜப்பான் அவதானம்…

wpengine

விவசாய உபகரணங்களுக்காக விசேட லீசிங் கொடுப்பனவை வழங்க பிரவுன்ஸ் நிறுவனத்துடன் இணையும் HNB

wpengine

முதலீட்டு சபை மூலம் வழங்கிய வரிச்சலுகை நீக்கம்!

wpengine