உள்நாட்டு செய்திகள்

மட்டக்குளி துப்பாக்கிச் சூட்டுக்கு சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் கைது..



மட்டக்குளி, பொலிஸ் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குரிய ஜுபிளி மாவத்தை, ரொட்ரியோ பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் பிறிதொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் 05 ஆம் திகதி இடம் பெற்ற குறித்த இந்த சம்பவத்தின் போது சந்தேக நபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களுக்கு நிதி அனுசரணைகளை வழங்கியதுடன், மோட்டார் சைக்கிளையும் வழங்கியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வத்தளை ஹேகித்தை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இன்று (12) கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

பயணிகளுக்கான பயணச்சீட்டை விநியோகிக்க பஸ்களில் இலத்திரனியல் இயந்திரம்…

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்…

wpengine

ரயில் சேவைகளில் மாற்றமில்லை

wpengine