உள்நாட்டு செய்திகள்

வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு நீதிமன்றிடம் அனுமதி கோருகிறார் யோஷித..



வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கூறி யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வௌிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கேட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

அமைச்சரவை மாற்றம் இன்று… – நாட்டிலிருந்து புறப்பட்ட மற்றும் புறப்படவுள்ள அமைச்சர்கள் விபரம்…

wpengine

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை..

wpengine

இரத்தினபுரி-எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறக்கம்…

wpengine