உள்நாட்டு செய்திகள்

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..



ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் தொடர்பில் கடந்த ஜனவரி 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதால் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 27ம் திகதிக்கு குறித்த வழக்கு விசாரணைகளை ஒத்தி வைத்து ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுல கருணாரத்ன இன்று(18) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இன்று சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

யால தேசிய வனப் பூங்கா நாளை(01) முதல் மூடப்படுகின்றது..

wpengine

கொவிட் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

wpengine

பசிலுக்கு சாதகமாக செயற்பட்டால் பிரதமரின் அரசியல் காலமும் முடிவடையும் : இராதாகிருஸ்ணன் எம். பி

News Editor