உலக செய்திகள்

வெளிநாட்டவர்களுக்கு வேலை வழங்குவதினை நிறுத்த சவுதி அரசு கவனம்..



சவுதி அரேபியாவில் கட்டுமானப்பணிகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பணிபுரிவதற்கு அதிகமான வெளிநாட்டினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது, வெளிநாட்டினர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை குறைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

சவுதியின் பொதுத்துறையில் சுமார் 70,000 வெளிநாட்டினர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் 3 ஆண்டுகளில் இவர்களுக்கு பதிலாக, உள்நாட்டினர்களை பணியில் அமர்த்த சவுதி அரசு முடிவு செய்துள்ளது.

குறிப்பாக வணிக வளாகங்களில் தன் நாட்டை சேர்ந்தவர்களையே பணியில் அமர்த்தவுள்ளது. வேலையில்லாமல் திண்டாடும் சவுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காகவே குறித்த இந்த முடிவினை சவுதி அரசு எடுத்துள்ளது.

இதன்படி, சவுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை படிப்படியாக நிறுத்துமாறு தனது அமைச்சகங்கள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஜிம்பாப்வேயில் புதிய ஜனாதிபதியினை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆரம்பம்…

wpengine

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது…

wpengine

ஆஸியில் பரவும் காட்டுத்தீ காரணமாக மக்கள் கடற்கரையில் தஞ்சம்

wpengine