உள்நாட்டு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு எதிரான வழக்கினை விசாரணை செய்ய திகதி அறிவிப்பு.



அரச வாகனமொன்றை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தொடரப்பட்டிருந்த வழக்கினை விசாரணை செய்ய இன்று(05) திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , குறித்த இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira) 

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால் – பெரும்பான்மையில்லாவிட்டால் – ஜேவிபி என்ன செய்யும்? அனுரகுமாரதிசநாயக்க..!

wpengine

பப் டு பிளஸிஸ் மற்றும் ஹஷீம் அம்லா ஒருநாள் போட்டிகளில் இருந்து நீக்கம்…

wpengine

சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில்..

wpengine