உள்நாட்டு செய்திகள்

நுகர்வோர் சட்டம் மீறப்படுகையில் அது தொடர்பாக அறிவிக்க விசேட தொலைபேசி இல…



தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தில் சந்தையில் நிலவும் பிரச்சினைகளை குறைத்துக் கொண்டு நுகர்வோரை மோசடி வர்த்தகர்கள் மற்றும் முறைகேடான சேவை வழங்குனர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு நாடளாவிய ரீதியாக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வர்த்தக மற்றும் கைத்தொழில் விவகார அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் இது தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏதேனும், சேவை வழங்கும் நிலையங்கள் நுகர்வோர் சட்டத்தை மீறி செயற்பட்டால் அது தொடர்பாக அவசர இலக்கமான 1977 என்ற தொலைபேசி எண்ணுக்கு நுகர்வோர் அறிவிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(rizmira)

Related posts

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீது நாட்டம் கொண்டதல்ல வாக்குப்பலத்திலேயே நம்பிக்கை கொண்டிருக்கின்றது” தர்காநகரில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று…

wpengine

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அதிகார சபை…

wpengine