உள்நாட்டு செய்திகள்

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க திகதி நியமிப்பு…



2010 – 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சொத்து விபரங்களை சமர்ப்பிக்காமை குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளும் எதிர்வரும் மே மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிமன்றம் இன்று(21) திகதி நியமித்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் குறித்த இந்த 5 வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் சாட்சியாளர்கள் குறித்த தினத்தில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

எவன்ட் கார்ட் வழக்கு தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் CID இனால் கைது

wpengine

வடக்கு தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்படும் – மத்திய வங்கி..

wpengine

தேசிய ஐக்கிய முன்னணி தனித்துப் போட்டி

wpengine