உள்நாட்டு செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை அமுலாக்கத் திட்டம்…



ஊடகவியலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் அமுலாகப்படவுள்ளது. இது குறித்து வீடமைப்பு அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களுக்கும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

நேற்றைய(23) பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

ஊடக அமைச்சு அமுலாக்கும் ‘ஒன்றாக வாருங்கள் மூச்சுவிடுங்கள்’ என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் தென்னிலங்கை செய்தியாளர்கள் சிலர் வடக்கு சென்றிருந்தார்கள்.

இந்த பயணத்தில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வீடுகளையும், முல்லைத்தீவில் ஒரு வீட்டையும் அமைக்க அடித்தளம் இடப்பட்டதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.

Related posts

கடும் மழையினால் வாகன நெரிசல்

wpengine

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு இன்று..!

wpengine

முழு நாட்டையும் முடக்கி வைக்க முடியாது

wpengine