உள்நாட்டு செய்திகள்

நாய்களை வீதிகளில் விட்டு செல்பவர்களுக்கு 25,000 அபராதத்துடன் சிறைத்தண்டனை…



நாய்களை வீதிகளில் விட்டு செல்பவர்கள் மற்றும் வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு எதிராக ரூபாய் 25,000 அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிப்பதற்கு சட்டத்தை உருவாக்கவுள்ளதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கொண்டவாறு தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் நாய்களை கொண்டு வந்து விட்டு செல்லும் நபர்களை இனங்கண்டு கொள்ளுவதற்கு CCTV கெமராக்களையும் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் இதன்போது தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் ரணில் பதவியேற்றபோது உலகம் உதவும் என்ற எதிர்பார்ப்பு வீண் போய்விட்டது- மரிக்கார்.

News Editor

இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை ..

wpengine

பொலிஸ் அதிகாரிகள் 43 பேருக்கு இடமாற்றம்

wpengine