உள்நாட்டு செய்திகள்

ரயில் சாரதிகள் இன்று(24)போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடல்…



தாம் மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட ரயில் ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(23) நள்ளிரவு முதல் இந்நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கவிருந்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் தொலைபேசி மூலமாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தாம், இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக, ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று(24) மாலை போக்குவரத்து அமைச்சருடன் தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணியானது வெற்றி…

wpengine

72 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்…

wpengine

நிரந்தர நியமனம் கோரி ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine