உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜர்…



தேசிய விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் வீடமைப்பு அமைச்சராக விமல் வீரவங்ச பதவி வகித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் பொறியியல் கூட்டுத்தாபன வாகனங்களை தமது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கியமை போன்ற இரண்டு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

இதன் நிமித்தமே அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினமும் விமல் வீரவங்ச வாக்குமூலம் அளிக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னதாக விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்புக்களை விமல் வீரவங்ச ஏற்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

எனவே, இது தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தகவல் வழங்கினர்.

இதனையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய விமல் வீரவங்க இன்று(29) வாக்குமூலம் அளிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.

Related posts

இன்று(01) முதல் நாடளாவிய ரீதியில் விஷேட சோதனை நடவடிக்கை…

wpengine

டிப்பர் வாகனம் மற்றும் ரயில் மோதியதில் பலர் படுகாயம்

wpengine

பல இடங்களில் மழையுடன் காலநிலை

wpengine